Gold Sovereign Bonds

இறையாண்மை தங்கம்

இந்திய அரசாங்கம் தங்களுடைய இறையாண்மை தங்கம் பத்திரங்களை விரைவில் அறிமுகப்படுத்தும் என்று அறிவித்துள்ளது.

இத்திட்டம் எவ்வாறு செயல்படும்?

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தங்க பத்திரங்கள விநியோகிக்கும். இவை இந்திய அரசின் பத்திரங்கள் என்பதனால், அவற்றிற்கு அரசு உத்தரவாதம் உள்ளது. பத்திரங்கள் தங்கத்தின் கிராம்களில் குறிப்பிடப்படும். அரசின் தங்கப் பத்திரங்கள் திட்டம். 2015-16 மற்றும் அதன் பிறகான வருடங்கள் முதற்கொண்டு அரசின் சந்தை கடன் திட்டத்திற்குள் அரசின் தங்கப் பத்திரங்கள் வழங்கப்படும். ரிசர்வ் வங்கி நிதி அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து வழங்கப்படும் உண்மையான தொகையை நிர்ணயிக்கும். தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்களின் ஆபத்தை ஏற்படுத்தப்படும் தங்க ஒதுக்கீட்டு நிதி ஏற்றுக்கொள்ளும். அரசின் நன்மையானது கடன் பெறும் தொகையின் குறைப்பில் இருக்கிறது, இது தங்க ஒதுக்கீட்டு நிதிக்கு மாற்றப்படும்.

செலவு: தங்கத்தை பொருளாக வாங்குவதற்கான ஆரம்ப செலவு 25 சதவீதம் அதிகமாக இருக்கும். அரசின் தங்கப் பத்திரங்களைப் பொறுத்த வரை, எந்த நுழைவுக் கட்டணமும் இருக்காது மற்றும் நிதி நிர்வாக செலவும் இருக்காது. விநியோகிக்கும் நிறுவனம் விநியோகச் செலவுகளை செலுத்தும் மற்றும் இடைநிலை சேனல்களுக்கான விற்பனைக் கமிஷனையும் அரசு திருப்பிக் கொடுக்கும்.

வட்டி விகிதம்: அரசின் தங்ப் பத்திரங்களைப் பொறுத்த வரை, அரசு நிர்ணயிக்கும் வட்டி விகிதத்தில் அரசே பத்திரங்களை விநியோகிக்கும். வட்டி விகிதம் உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தை நிலைமைகளை பொறுத்து இருக்கும் மற்றும் இது இடத்திற்கு இடம் மாறுபடும். இந்த வட்டி விகிதம் முதலீட்டு நேரத்தில் உள்ள தங்கத்தின் மதிப்பில் கணக்கிடப்படும். இந்த விகிதம் தீர்மானிக்கப்பட்டது போல ஒரு நிலையற்ற அல்லது ஒரு நிலையான விகிதமாக இருக்கலாம். தங்கத்தின் விலை தீர்மானிக்கப்பட்டது போல குறிப்பு விகிதத்திலிருந்து எடுக்கப்படலாம் மற்றும் வழங்கும் போதும் மீட்கும் போதும் ரிசர்வ் வங்கியின் குறிப்பு விலையில் ரூபாய்க்கு சமமான தொகைக்கு மாற்றிக் கொள்ளலாம். வழங்கல், மீட்டல் மற்றும் எல்.டி.வி (LTV) நோக்கம் மற்றும் கடன்களை வழங்குவதற்கு இந்த விகிதம் பயன்படுத்தப்படும்.

வரம்புகள்: அரசின் தங்கப் பத்திரங்கள் 5, 10, 50,100 கிராம் தங்கம் அல்லது பிற பிரிவுகளில் வழங்கப்படும் மற்றும் முதலீடு வருடத்திற்கு ஒரு நபருக்கு 500 கிராம் என்றே இருக்கும். பணம் மற்றும் கிராம்களில் தங்கத்தைக் கொடுத்து நியமன தங்க பத்திரங்களைப் பெற்றுக் கொள்ளலாம். இந்திய குடிமக்கள் அல்லது நிறுவனங்கள் பத்திரங்களை வாங்கிக் கொள்ளலாம், இது 500 கிராமில் முதலீடு செய்யப்படுகிறது.

எவ்வாறு முதலீடு செய்ய வேண்டும்?

நிர்ணயிக்கப்பட்ட வங்கிகள், என்.பி.எப்.சி.கள் (NBFCs), தபால் அலுவலகங்கள், தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC) முகவர்கள் மற்றும் அரசு குறிப்பிட்ட பிற நிறுவனங்கள் விநியோக முகவர்களாக இருப்பார்கள். அரசின் சார்பாக முதலீடுகளை சேகரிக்கவும் மற்றும் பத்திரங்களை மீட்பதற்கும் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்படும்.

இது எனக்குத் தானா?

முதிர்வின் போது, பண மதிப்பிலேயே மீட்கப்படும். பத்திரங்களின் வட்டி விகிதம் முதலீட்டு நேரத்தில் உள்ள தங்கத்தின் மதிப்பில் கணக்கிடப்படும். தங்கத்தின் கிராம்களில் தீர்மானிக்கப்படும் முதலீட்டின் முதன்மைத தொகை அந்த நேரத்தில் தங்கத்தின் விலையில் மீட்கப்படும். முதலீடு செய்யத நேரத்தை விட தங்கத்தின் விலை குறைந்து விட்டால் அல்லது பிற காரணத்திற்காகவும், மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட வருடங்கள் பத்திரத்தை மாற்றி வைத்துக் கொள்ளும் வசதியும் முதலீடு செய்பவர்களுக்கு வழங்கப்படும். நஷ்டங்கள் மற்றும் வீழ்ச்சி ஆபத்துக்கள் முதலீட்டாளரை சார்ந்ததாகும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள், எனவே முதலீட்டாளர்கள் தங்கத்தின் விலைகளின் ஏற்ற இறக்கங்களை அறிந்து வைத்திருக்க வேண்டும்.