Published: 27 செப் 2017

இந்தியாவில் தங்கத்திற்கான அலெக்ஸாண்டரின் தேடல்

பண்டைய கிரேக்கத்திற்கு முதன்முதலாக வர்த்தக வழித்தடங்களைத் திறந்தவர் கிரேக்க மன்னர் அலெக்ஸாண்டர். பின்னர் இந்திய வாசனைப்பொருட்கள் மற்றும் நெய்யப்பட்ட துணிகளுக்கு மாற்றாக கிரேக்க தங்கக் குவியல்கள் பரிமாற்றம் செய்யப்பட்டது.

மிகப்பெரிய புதையல்களின் நிலப்பரப்பாக இந்தியா திகழ்கிறது. சாலமன் மன்னரின் வளங்கள், கிழக்கிலிருந்து வந்ததாக நம்பப்படுகிறது, மேலும் வர்த்தகம் செய்வதற்காக அவரது கப்பல்கள் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்தது.

அங்கிருந்து, அவரது வர்த்தக கப்பல்களானது தங்கம் மற்றும் விலையுயர்ந்த கற்களைப் பெற்றது, "வெள்ளி என்பது சாலமன் காலத்தில் கணக்கில் கொள்ளப்படவில்லை," என்று ஹெச்.ஈ. மார்ஷல் என்பவர் "அவர் எம்பயர் ஸ்டோரி" என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் பொக்கிஷங்களால் பணக்காரர்களாகவும் அழகானவர்களாகவும் ஆன பழங்கால இனத்தைச் சேர்ந்த அரசர்கள் மற்றும் ராணிகளின் கதைகள் இருந்தன; ஆனால் தங்கம் மற்றும் வாசனைப்பொருட்களின் நிலத்தைச் சேர்ந்த குறைவானவர்களே அங்குப் பயணித்ததால், சில கதைகள் மட்டுமே தெரியவந்துள்ளது.

சிரியா, எகிப்து மற்றும் பெர்சியா வழியாகக் கடந்து வந்த பின்னர், கிரேக்கத்தைச் சேர்ந்த பெரும் வெற்றியாளரான அலெக்ஸாண்டர், அளவில்லா தங்கம் கொண்ட நிலத்தை ஆக்கிரமிக்க தனது படையை வழிநடத்தினார். அடர்ந்த காடுகளின் வழியாக அவர்கள் நடந்து வந்த பொழுது, தெரியாத மிருகங்கள் மற்றும் தங்க நிற செதில்கள் கொண்ட பாம்புகள் என அவருடைய படைவீரர்கள் விசித்திரமான புதிய விஷயங்களைக் கண்டனர். அவர்களின் நாட்டிற்குத் திரும்பியபோது, சிங்கங்களுடன் சண்டையிடும்பொழுதும் பயப்படாமல் இருந்த நாய்கள் போன்ற மிருகங்களைப் பற்றிய கதைகளையும், தங்கத்தை தோண்டி எடுக்கையில் நரிகள் அளவில் இருந்த பெரிய எறும்புகளின் கதைகளையும் அவர்கள் பேசினர்.

ஆனால் கிமு 327-ல், பேரரசர் அலெக்ஸாண்டர் இந்தியாவுக்கு வந்தார்.

அவரும், அவரது படையினரும் இரத்தினக்கற்கள் மற்றும் நகைகள் ஆகியவற்றுடன் தாய்நாட்டிற்கு செல்வச் செழிப்பாகத் திரும்பலாம் என்று நம்பினர், ஆனால் இந்தியாவில் அலெக்சாண்டரின் படையினரால் அதிக அளவிலான தங்கம் அல்லது செல்வத்தைப் பெற முடியவில்லை. கிட்டத்தட்ட எல்லாத் தங்கங்களும் அரசகுலத்தினர்களிடம் இருந்த பாரசீகப் பேரரசில் இருந்த தங்கத்தின் நிலைக்கு மாறாக, இந்தியாவில் தங்கம் மற்றும் செல்வம் ஆகியவை பரவலாக பரவியிருந்தது. படை மேல் படை எடுத்தும், அலெக்ஸாண்டர் வெறும் கையுடன் நாடு திரும்பினார்.

இந்தியாவில் கூட்டணிகளை ஏற்படுத்த முற்படும் முயற்சியாக, அலெக்ஸாண்டரின் வீரர்கள் தங்களுடைய கைகளில் தங்கத்தைப் பெற முடியாமல் போனது மட்டுமல்லாமல், அதற்கு பதிலாக 1000 டேலன்ட்ஸ் தங்கத்தை தக்ஷசீலத்தின் ஆட்சியாளரான அம்பீக்கு செலுத்த வேண்டியிருந்தது என்று பக்திவேஜநாயனா சுவாமி எழுதிய இதிகாசம்: வரலாற்றின் எனது கதையே அவர் கதையின் இரகசியம் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.