Published: 12 செப் 2017

பண்டைய இந்தியாவின் முதல் தங்க நாணயங்கள்

Old Gold Coins In India

குஷானப் பேரரசர் வீமா கடாபீசெஸ் என்பவர் கி.மு. 100-ல் இந்தியாவில் முதன்முதலில் தங்க நாணயங்களை அறிமுகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. வீமா என்பவர் கிட்டத்தட்ட வடக்கு இந்தியா முழுவதிலும் ஆட்சி செய்த ஐந்தாவது குஷானப் பேரரசரான கனிஷ்கருக்கு முன்னால் ஆட்சியில் இருந்தார்.

குஷானப் பேரரசு என்பது தெற்கு உஸ்பெகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தானில் இருந்து, இன்றைய ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் பெரும்பகுதி வழியாக, காஷ்மீர் உள்ளிட்ட வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து இப்போது பீகார் மாநிலத்தின் தலைநகரான பாட்னா என்று அழைக்கப்படும் பாடலிபுத்ரா வரை நீண்டிருந்தது.

இந்தியாவில் இந்த முதல் நாணயங்களானது, புத்தர் காலத்தில் இந்திய-கங்கை சமவெளியின் மகாஜனபாடர்களால் கி.மு. 6ஆம் நூற்றாண்டு வாக்கில் அச்சடிக்கப்பட்டது. அது கி.மு. நான்காம் நூற்றாண்டில் அலெக்ஸாண்டரின் பெரும் படையெடுப்புக்கு முன்னர் நிச்சயமாக நிகழ்ந்தது. இந்தக் காலகட்டத்தின் நாணயங்கள் என்பது பன்ச்-குறியிடப்பட்ட நாணயங்கள் ஆகும். இவற்றில் பல நாணயங்கள் ஒரே மாதிரியான குறியீட்டைக் கொண்டிருந்தன, உதாரணமாக, ஒரு காளை அல்லது ஒரு ஸ்வஸ்திகா.

சிவன், புத்தர் மற்றும் கார்த்திகேயன் போன்ற முக்கிய இந்தியக் கடவுள்கள் சித்தரிக்கப்பட்ட இந்தியப் புராணங்களிலிருந்த உருவங்களானது, குஷானர் கால தங்க நாணயங்களில் பொறிக்கப்பட்டது. மற்ற உருவங்களானது கிரேக்க, மெசொப்பொட்டமிய மற்றும் ஜோரோஸ்ட்ரிய புராணங்களிலிருந்து பெறப்பட்டன, அவை அந்தக் காலத்தில் வெவ்வேறு மதங்கள் இணைந்திருந்ததை நிரூபிக்கின்றன. நவீன இந்தியாவானது, அதே மதிப்புகளைத் தொடர வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள்.

கனிஷ்கரின் ஆட்சியின் ஆரம்ப காலத்தில் இருந்த நாணயங்களானது கிரேக்க மொழியின் எழுத்துக்கள் மற்றும்புராணங்களைக் கொண்டிருந்தன மற்றும் கிரேக்க தெய்வங்களை சித்தரித்தன. பின்னர் குஷானர்கள் பேசிய ஈரானிய மொழியான பாக்ட்ரியன் என்பது நாணயங்களில் இருந்தன, மேலும், கிரேக்க தெய்வங்களுக்குப் பதிலாக ஈரானிய கடவுள்கள் மாற்றப்பட்டன.

குஷான நாணயங்களில், அரசர் என்பவர் பொதுவாக ஒரு நீண்ட கோட் மற்றும் கணுக்கால் வரை நீண்ட கால்சட்டை அணிந்த, தாடி வைத்திருக்கும் ஒரு நபராக சித்தரிக்கப்படுகிறார், அவரது தோள்களில் இருந்து எரியும் நெருப்புகள் தோன்றுவது போன்ற தோற்றத்துடன் அவர் காட்சியளிக்கிறார். அவர் பெரிய வட்ட வடிவ பூட்ஸ் அணிந்துள்ளார், மேலும் ஒரு கொடுவாள் மற்றும் ஒரு பட்டாக்கத்தி போன்ற நீண்ட வாளை ஆயுதமாக வைத்திருக்கிறார். அவர் ஒரு சிறிய பலிபீடத்தின் மீது தியாகம் செய்வது போன்று பெரும்பாலும் காணப்படுகிறார். குஷான தங்க நாணயங்களானது தொடர்ந்து வந்த வம்சங்களில் தாக்கம் செலுத்தியது, குறிப்பாக குப்தர்களிடம் (கி.மு. 4வது - 6வது நூற்றாண்டுகள்) அதிக தாக்கம் செலுத்தியது.