Published: 04 செப் 2017

கடவுளுக்குப் பொருந்துதல்: பைத்தானி சாரியின் வரலாறு

History of paithani saris - Woven with gold

வரலாற்றில் ஆழமாக வேரூன்றிய ஒரு கதையை பைத்தானி சாரி சொல்கிறது. டெக்கான் நாகரிகம் தோன்றிய காலத்திய 2000 ஆண்டு மரபு கொண்ட கதை இதுவாகும். இது பட்டு, ஜரிகை, நேர்த்தி மற்றும் பிரமாண்டம் ஆகியவை கொண்ட ஒரு பாரம்பரியத்தின் கதை ஆகும். கோதாவரி ஆற்றின் கரையில், மகாராஷ்டிராவில் உள்ள பைத்தான் என்ற இடத்தில் தோன்றியதால் அந்தப் பெயரில் அழைக்கப்படுகிறது. கி.மு 200-ல் சாதவாஹன வம்சத்தின் கீழ் பைத்தானி பயிரிடப்பட்டது.

கைத்தறிகளில் முற்றிலும் நெய்யப்பட்ட பைத்தானி என்பது, செல்வச்செழிப்பான துணிகள், கண்கவர் வண்ணங்கள் மற்றும் தங்கத்தின் நேர்த்தியான வடிவமைப்புகள் சேர்த்து நெய்யப்பட்ட திரைச்சீலையின் ஒரு பழமையான வடிவமாகும். தங்கம் மற்றும் பட்டு ஆகியவற்றால் செய்யப்படும் பைத்தானி சாரி-ஐ தயாரிக்க 18 முதல் 24 மாதங்கள் வரை எடுக்கும், இது பலராலும் ஆராதிக்கப்படும் ஒன்றாகும். யுனெஸ்கோவின் கருத்துப்படி, இந்த அழகான தங்கத்தால் நெய்யப்பட்ட துணியை உருவாக்கியவர்கள் முதன்முதலில் ரோமானியர்களிடம் தங்கத்திற்கு மாற்றாக வர்த்தகம் செய்தார்கள்.

உண்மையில், சாதவாஹன அரசர்கள் சாரிகளுக்கான வெளிநாட்டு வர்த்தக வாய்ப்புகளை முதன்முதலாக பயன்படுத்திக்கொண்டனர் என்றும், மேற்கு நாடுகளில் துணிகளின் மீது உள்ள அவர்களின் எண்ணங்களைத் தெரிந்துகொள்வதற்காக அங்கு பல தூதுவர்களை அனுப்பி வைத்தனர் என்றும் இந்தியாவின் ஜவுளித் துறை அமைச்சகம் தெரிவிக்கிறது.

கோதாவரியின் வளமான துணை நதிகளானது பைத்தானி பகுதிக்கு கனிம வளம், வளமான மண் மற்றும் வன வளங்கள் ஆகியவற்றைக் கொண்டு வருகிறது, அது பைத்தானி சாரி-இன் கலாச்சார முன்னேற்றத்திற்கு பங்களிக்கிறது. முகலாயப் பேரரசின் 17வது நூற்றாண்டைச் சேர்ந்த பேரரசர் அவுரங்கசீப், பைத்தானியை மீண்டும் புகழ் வெளிச்சத்திற்கு கொண்டுவர உதவினார். அரச குலத்தினர், ஹைதராபாத் நிஜாம் மற்றும் மலர்கள் போன்ற புதிய வடிவங்களை அறிமுகப்படுத்திய முகலாயர்கள் சாரிகளானது பல தசாப்தங்களாக இந்திய செல்வாக்கு, கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றால் ஆசீர்வதிக்கப்பட்டன.

முகலாய காலத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர், புனேவின் பேஷ்வாக்கள் மீண்டும் தங்களின் ஆட்சியின்கீழ் பைத்தானி சாரிகளை மீட்டெடுத்தனர், அவர்கள் ஷீரடி அருகே ஒரு சிறு நகரத்தில் கைவினைஞர்கள் தங்க உதவினர். இருப்பினும், அரச குலம் வீழ்ச்சியடைந்ததால், பைத்தானி கலையும் வீழ்ச்சியடைந்தது.

பைத்தானி சாரி என்பது மகாராஷ்டிராவின் அழியப்போகும் கலையாக இருந்தது. பின்னர், 2016ஆம் ஆண்டில், இந்திய அரசாங்கமும், மகாராஷ்டிரா அரசும் நெசவாளர்களுடன் இணைந்து பைத்தானி நெசவை மீட்டு, அதன் மறுமலர்ச்சிக்கு வித்திட்டது. எதிர்காலத் தலைமுறையினருக்கு இந்த கலை வடிவத்தைக் கொண்டு செல்ல உதவுவதற்காக ஏற்றுமதி மற்றும் உயர்தர ஆடைகளில் இப்பொழுது கவனம் செலுத்தப்படுகிறது.

இது அதன் உரிமையாளர்களுக்கு ஒரு சில தலைமுறைக்கும், இந்தியாவிற்கு பல நூற்றாண்டுகளுக்கும், வாழ்நாள் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு பொக்கிஷம் ஆகும்.