Published: 04 செப் 2017

நோய் சிகிச்சைகளில் தங்கம்

நோபல் உலோகங்கள் மற்றும் அவற்றின் கலவைகள் ஆகியவை மருத்துவத்தில் சிகிச்சை முகவர்களாக இருப்பதற்கான ஒரு நீண்ட மற்றும் புகழ்பெற்ற வரலாறு உள்ளது.

மாநில மருத்துவ அறிவியல் கல்லூரி, டாக்கா மற்றும் மகளிர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, டாக்கா ஆகியவற்றின் ஆய்வு ஒன்றின்படி, சமீபத்திய ஆண்டுகளில் உயிரியல் மற்றும் உயிர் மருத்துவம் சார்ந்த பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையில் நானோ பொருட்களின் வடிவமைப்பு மற்றும் ஆய்வுகளில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதைக் காணலாம். பரவலான பயன்பாடு காரணமாக, தங்கத்தின் நானோ துகள்களானது வழக்கமான தங்கத்தைவிட இப்போது மிகவும் விலைமதிப்பற்றதாக உள்ளது.

தங்கத்தின் நானோ துகள்களானது, ஆஞ்சியோஜெனிக் நாளங்கள் மற்றும் முறையற்ற நிணநீர் ஓட்டங்களால் ஏற்படும் தக்கவைப்பு விளைவு மற்றும் ஊடுருவல் எனப்படும் சேர்த்து, சிக்க வைக்கும் செயல்முறை மூலம் கட்டி செல்களை இலக்காகக் கொள்கிறது. எனவே, நானோ துகள்களானது சாதாரண செல்களை விட அதிக செறிவுகளில் உள்ள புற்றுநோய் செல்களை தேர்ந்தெடுத்து குவிக்கிறது.

மகளிர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, டாக்காவின் உயிர்வேதியியல் துறை மற்றும் மருத்துவத் துறை ஆகியவற்றால் கூட்டாக வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையின்படி, எளிதில் தயாரிக்க முடிதல், குறைவான நச்சுத்தன்மையைக் கொண்டுள்ளது, அதிக மேற்பரப்பு, உயிரியல் ஆர்வம் கொண்ட மூலக்கூறுகளுடன் உடனடியாக இணைக்க முடிதல் மற்றும் ஒளி-இயல்பு மற்றும் ஆப்டிகல் பண்புகள் ஆகியவற்றின் காரணமாக, தங்க நானோ துகள்களானது அதிக விருப்பமானதாக உள்ளது. இந்த தனித்த பண்புகளானது கீமோதெரபி, புற்று நோய் கண்டறிதல், பாக்டீரியா நோயறிதல் மற்றும் மருந்து வழங்குதல் ஆகியவற்றில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும்.

2017-ன் ஆரம்பத்தில், அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியரான டோனி ஹூ தலைமையிலான பல-நிறுவன குழுவானது, நேச்சர் பயோமெடிக்கல் இன்ஜினியரிங்கில் தங்கள் முடிவுகளை வெளியிட்டனர், அவர்கள் கணைய புற்றுநோயை கண்டறிவதற்காக தங்கத்தைப் பயன்படுத்தி ஒரு புதிய இரத்த பரிசோதனையை கண்டுபிடித்ததாகக் கூறினர். இதை மற்ற உறுப்புகளுக்கு பரவுவதற்கு முன்னர் கண்டுபிடிப்பது கடினம் என்பதால், இந்த நோயானது மிகவும் கொடுமையான புற்று நோய்களில் ஒன்றாகும், மேலும் கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 8 சதவீதத்தினர் மட்டுமே, நோய் கண்டறியப்பட்ட பிறகு (ஸ்டாண்ட்போர்டு பல்கலைக்கழகம்) ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் உயிர் வாழ்கின்றனர்.

ஆய்வாளர்கள் தங்க நானோ துகள்களைப் பயன்படுத்தி உயிர்-உணரிகளை ஏற்படுத்தினர், இது புற்றுநோய் புரதங்களை பிணைத்து, அதன் ஒளி உமிழும் பண்புகளை மாற்றியமைக்கிறது. நோயின் ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் மற்றும் நாள்பட்ட கணைய அழற்சி நோயாளிகள் உட்பட, ஆராய்ச்சியாளர்களால் கணைய புற்றுநோய் கொண்ட நோயாளிகளை துல்லியமாக அடையாளம் காண முடிந்தது.

பரந்த அளவு மருத்துவப் பரிசோதனைகளுடனான இரத்தப் பரிசோதனை, கணைய புற்றுநோயை கண்டறிய பயன்படுத்தப்படலாம், இதன்மூலம் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற முடியும்.