Published: 08 பிப் 2018

தங்க மூக்குத்திகள்

மூக்கு வளையம், அல்லது நாதம் என்பது பல நூற்றாண்டுகளாக இந்தியாவின் புகழ்பெற்ற ஒரு ஆபரணமாக உள்ளது.

நாதம் என்பது மத்திய கிழக்கில் தோன்றியது என்றும், மொகலாயர்களால் இந்தியர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் பல வரலாற்றாசிரியர்கள் நம்புகிறார்கள். ஆனால், 5,000 ஆண்டுகளுக்கு முன்னர் பார்வதி தேவி மற்றும் கிருஷ்ண பகவான் ஆகியோர் அதை அணிந்திருந்ததாக சில சான்றுகள் உள்ளன.

9ஆம் மற்றும் 10ஆம் நூற்றாண்டில் நாதம் புகழ் பெற்றதாக இருந்தது என்றும்,  பெண்களின் திருமண நிலையை அடையாளப்படுத்தும் ஒரு முக்கிய அங்கமாக அது மாறியது என்பதும் சமீபத்தில் நமக்குத் தெரியவந்தது. அரசர்கள், மந்திரிகள் மற்றும் பணக்கார குடும்பத்தினர்களின் மனைவிகள் ஆகியோர் தங்கள் செல்வச்செழிப்பு மற்றும் உயர் பொருளாதார அந்தஸ்தை வெளிப்படுத்த முத்துக்கள், நீலக்கல், மற்றும் குந்தன் போன்றவை பதிக்கப்பட்ட அழகிய தங்க நாதங்களை அணிந்தனர்.

தங்க ஆபரணத்தின் புகழ் 15ஆம் நூற்றாண்டில் வளரத் தொடங்கிய பிறகு, அதன் அளவு மற்றும் அதன் வடிவமைப்பு ஆகியவற்றில் மாற்றம் ஏற்படத் தொடங்கியது, மேலும்  அது தொடர்ந்து வளர்ந்து வருகிறது.

இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பகுதிகளுக்கு ஏற்ப நாதத்தின் அடையாளங்கள் வேறுபடுகின்றன. மகாராஷ்டிராவில், பெண்கள் பொதுவாக முகத்தின் ஒரு பக்கத்தை மூடியிருக்கும் வகையில் ஒரு பெரிய நாதத்தை அணிகிறார்கள். அதேபோல், பெங்காலி பெண்கள், மூக்கின் நடுவில் துளையிடுவதை (மூக்கின் மத்தியில்) விரும்புகிறார்கள். வடகிழக்கு பகுதியில், குமாவோ அல்லது கர்வால் இனப் பெண்கள் தங்கள் திருமண நாளில் இந்த அழகுபடுத்தப்பட்ட தங்க நாதங்களை அணிந்து கொள்வதில் ஆர்வம் கொள்கின்றனர்.

தேசம் முழுவதும் உள்ள அழகிய நாதங்களில், கர்வால் இனப் பெண்கள் அணியும் ‘தெஹ்ரி நாதத்தின்’ அழகானது காண்போரை வியக்க வைக்கிறது. மிகவும் சிறிய அளவிலான குமாவோ நாதத்துடன் ஒப்பிடும்போது, ​​ கர்வால் நாதமானது பெரிய அளவிலான மூக்கு வளையங்களாக உள்ளது. இது தங்கத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் பொதுவாக உருவங்கள், மயில்கள் மற்றும் மலர் வடிவங்கள் போன்ற விரிவான வடிவமைப்புகளுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த விலைமதிப்பற்ற ஆபரணமானது உத்தரகண்டில் மணமகளின் வரதட்சணையின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது, ஏனெனில், இது மற்ற நாதங்களுடன் ஒப்பிடுகையில் அதிக அளவிலான தங்கத்தைக் கொண்டுள்ளது. இது தூய்மையின் அடையாளமாகவும், மணமகளின் கன்னித்தன்மையைக் குறிப்பதாகவும் நம்பப்படுகிறது.

உலகெங்கிலும் உள்ள கலாச்சாரங்களானது, இந்தியாவின் மிகுந்த விருப்பத்திற்குரிய மூக்கு வளையங்களை பயன்படுத்தத் தொடங்கியிருப்பதால், இன்றைய காலகட்டத்தில் நாதம் புத்துயிர் பெற்றுள்ளது. ஒரு பெண்  அணிந்திருக்கும் தங்க வளையமான இது, விலைமதிப்பற்ற உலோகமாக மட்டுமல்லாமல், விலைமதிப்பற்ற உணர்ச்சிகளையும் கொண்டுள்ளது.