Published: 28 ஆக 2017

முகலாய காலத்தில் தங்கம் எவ்வாறு உணரப்பட்டது?

நாணயங்கள், பெரும்பாலும் வெளியிடும் வம்சத்தின் அல்லது அரசின் அதிகாரத்தையும், மதத்தையும், பொருளாதாரத்தையும் வெளிப்படுத்துகிறது. இந்தியாவில், ஏகாதிபத்திய மற்றும் மத்திய காலகட்ட இராஜ்யங்களால் வெளியிடப்பட்ட நாணயங்கள், அவர்களுடைய அரசியல் கொள்கைகள் மற்றும் நிதிநிலைமைகளை வெளிப்படுத்துகின்றன, மேலும் சாம்ராஜ்யம் மற்றும் அரசின் மீது ஆட்சியாளருக்கு இருந்த கட்டுப்பாட்டின் அடையாளமாக அவை இருந்தன. வரலாற்று அறிஞர்களின் கூற்றுப்படி, முதன்முதலில் நாணயங்களின் புழக்கம், கி.மு. ஆறாம் நூற்றாண்டில் துவங்கியது மற்றும் அவை இந்திய துணைக்கண்டத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுவந்தன.

பொருளாதார ரீதியாக வலுவான இந்தியாவின் வரலாறானது, பல்வேறு செல்வந்த வம்சத்தினர் மற்றும் பிரிட்டிஷ் ராஜ்ஜியங்கள் ஆகியவற்றின் நாணயங்களைக் கொண்டுள்ளது. இந்தியாவை ஆட்சி செய்த அனைத்து வம்சங்களிலும் முகலாயர்கள் மிகவும் புகழ்பெற்றவர்கள் ஆகும். முகலாய காலத்தில் இந்திய வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் செழித்தோங்கியதாக நம்பப்படுகிறது.

இந்தக் காலகட்டத்தில், நாணயங்களானது முதன்முதலில் சூர் சாம்ராஜ்யத்தின் நிறுவனரான ஷெர் ஷா சூரியால் அறிமுகப்படுத்தப்பட்டது, மேலும் 1540 முதல் 1545ஆம் ஆண்டுகளுக்கு இடையில் முகலாயப் பேரரசைக் கட்டுப்படுத்தியது. டேம் மற்றும் மொஹூர் போன்ற நாணயங்கள் புழக்கத்திற்கு வந்து பரவலாகப் பயன்படுத்தப்பட்டன.

டேம் மற்றும் மொஹூர் ஆகியவை சிறிய செப்பு நாணயங்கள் ஆகும், மேலும் தங்க நாணயங்கள் மற்றும் வெள்ளி நாணயங்கள் ஆகியவை ரூபியா என்று அழைக்கப்பட்டன. மொஹூர் என்பது அஷ்ரஃபி என்றும் அறியப்பட்டது, இது பதினைந்து வெள்ளி ரூபாய்களுக்கு சமமானதாகும், மேலும் அவை 10.95 கிராம் எடையைக் கொண்டிருந்தன. எனினும், பல்வேறு உலோகங்களால் ஆன இந்த நாணயங்கள், தரநிலைப்படுத்தப்பட்டு, பிந்தைய மொகலாய பேரரசர்களால் பணம் சார்ந்த முறையாக மாற்றப்பட்டது.

கம்பீரமான மொகலாய வம்சத்தின் பேரரசராக அக்பருக்கு முடிசூட்டப்பட்டபோது, அவர் இந்தியாவின் நாணய வரலாற்றில் முதல் கண்டுபிடிப்பாகக் கருதப்படும் புதிய வடிவமைப்புகளையும் வடிவங்களையும் பயன்படுத்தினார். இந்த காலகட்டத்தில் வெளியிடப்பட்ட மாத்திரை-வடிவ நாணயங்களில், புள்ளியிடப்பட்ட எல்லைகள், மலர் வடிவங்கள் மற்றும் படலங்கள் போன்ற தனித்துவமான வடிவமைப்பு அம்சங்களால் அலங்கரிக்கப்பட்டன, மேலும், கையால் எழுதப்பட்டு, செதுக்கப்பட்ட இந்த நாணயங்களானது இஸ்லாமிய நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. கூடுதலாக, அக்பரின் உருவப்படம் பொறித்த தங்க நாணயமானது அவரது மகன் சலீமிடம் அளிக்கப்பட்டது, இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட பொழுது சமரசம் செய்வதற்கான ஒரு சின்னமாக இந்த நாணயம் அளிக்கப்பட்டது.

இன்று, முகலாயர்கள் வெளியிட்ட தங்க மொஹூர் என்பது நாணய சேகரிப்பாளர்களால் மிகவும் விரும்பப்படும் நாணயமாக உள்ளது, மேலும் அவை பெருந்தொகைக்கு ஏலத்தில் விடப்படுகின்றன. கவர்ந்திழுக்கும் இந்த நாணயங்கள், இந்தியாவில் உள்ள பல்வேறு அருங்காட்சியகங்களில் பொதுமக்களின் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.