Published: 27 செப் 2017

தங்கம் உள்ள மருந்துகளானது உடலையும், ஆன்மாவையும் சுத்திகரிக்கின்றன

நீங்கள் எகிப்துக்குச் சென்றால், கெய்ரோ அருங்காட்சியகத்தில் தங்கத்தால் ஆன ஒரு பல் இணைப்பைக் காணலாம் - இது 4,500 ஆண்டுகள் பழமையானது ஆகும். தங்கம் பணமாக மாறிய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், அது பல்வேறு பயன்களைக் கொண்டிருந்தது. பண்டைய எகிப்தியர்கள் தங்களின் உடல், ஆன்மா மற்றும் மனம் ஆகியவற்றை சுத்திகரிக்க தங்கள் உணவில் தங்கத் துகள்களை சேர்த்தனர் என்று சில வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பண்டைய நகரமான அலெக்ஸாண்ட்ரியாவில், நேர்த்தியைப் பிரதிபலிக்கும் மர்மமான பண்புகளை தங்கம் கொண்டிருப்பதாக இரசவாதிகள் நம்பியதால், திரவ தங்கத்தினால் ஆன ஒரு 'அமிர்தத்தை' இரசவாதிகள் உருவாக்கினர். மனித உடலில், முழுமையான ஆரோக்கியத்தை மீட்பது தவிர, அது புத்துணர்ச்சியளிக்கிறது மற்றும் பல நோய்களைத் தீர்க்கிறது.

இடைக்கால ஐரோப்பாவில் தங்கம் பூசப்பட்ட மாத்திரைகள் மற்றும் தங்கத் தண்ணீர் ஆகியவை மிகவும் பிரபலமாக இருந்ததாக புராணங்கள் கூறுகிறது. ‘கை கால் வலிகளைத் தணிப்பதற்காக’ இரசவாதிகள் தங்கத் துகள்களை பானங்களில் கலந்துப் பயன்படுத்தினர் (மூட்டு வலியை குணமாக்க ஏன் பயன்படுத்தப்பட்டது என்று விளக்கப்படலாம்). 15ஆம் மற்றும் 16ஆம் நூற்றாண்டுகளில், நவீன மருந்தியலின் தந்தையாக கருதப்படும் பாராசெல்ஸஸ் என்பவர், தங்கம் உட்பட விலைமதிப்பற்ற உலோகங்களைப் பயன்படுத்தி பல மருந்துகளை உருவாக்கியுள்ளார்.

பாராசெல்ஸஸ் என்பவர் நவீன மருந்தியலின் முன்னோடியான லேட்ரோ-வேதியியல் அல்லது மருத்துவ வேதியியல் ஆகியவற்றுக்கான பள்ளியை நிறுவியுள்ளார். தங்கத்தின் மருத்துவ குணங்களின் மீதான நம்பிக்கை என்பது 19 ஆம் நூற்றாண்டு வரை எல்லா இடங்களிலும் இருந்தது. ஐரோப்பியர்கள் நூறு ஆண்டுகளுக்கு மேலாக தங்கம் பூசப்பட்ட மாத்திரைகள் மற்றும் தங்கத் தண்ணீரை கடைகளில் வாங்கி வருகின்றனர் என்று சில எழுத்தாளர்கள் கூறியுள்ளனர்.

நவீன காலகட்டத்திலும் கூட, கிராமப்புற சீனாவில், தங்கம் என்பது இன்னும் இயற்கை மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது; விவசாயிகள் தங்கத்தின் புத்துணர்ச்சியூட்டும் குணநலன்களைப் பயன்படுத்திக் கொள்வதற்காக, அவர்கள் சமைக்கும் அரிசியில் ஒரு தங்க நாணயத்தைப் போடுகிறார்கள். நகரங்களில் உள்ள பல உணவகங்களில், சீன சமையல்காரர்கள் தங்கள் உணவில் 24 காரட் தங்க இலைகளை சேர்த்துக் கொள்வதாகக் கூறப்படுகிறது.

நவீன விஞ்ஞான யுகத்தில், இது மிகைப்படுத்தப்பட்டதாக தோன்றலாம். ஆனால் இதைக் கவனியுங்கள்: சிகாகோவில் உள்ள ஒரு மருத்துவரான டாக்டர் எட்வர்ட் ஓகனெர் என்பவர் மருத்துவ மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை என்ற இதழில் ஜூலை 1935-ல் வந்த ஒரு கட்டுரையில் பின்வருமாறு கூறினார்: "உடலின் நிலைமை நம்பிக்கையற்றதாக இருக்கும்போது, நோயாளிகளுக்கும் அவர்களைச் சேர்ந்தவர்களுக்கும் கூழ்ம தங்கம் என்பது ஆயுளை நீட்டிக்கிறது மற்றும் அதிக தாங்கும் வல்லமையை அளிக்கிறது, ஏனெனில் அது உடல்நலமின்மை காலகட்டத்தைக் (நாள்பட்ட நோயுடன் தொடர்புடைய பொதுவான உடல் பலகீனம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு) குறைக்கிறது, மேலும் வலி மற்றும் அசௌகரியம் ஆகியவற்றைப் பொதுவாகக் குறைக்கிறது, மற்றும் பெரும்பாலான நிகழ்வுகளில் ஓபியேட்ஸ்-க்கான தேவைகளைக் குறைக்கிறது.”

'தங்கத்தின் மீதான அதிக ஆசையும்' ஒரு நோய் என்று அழைக்கப்படுகிறது, ஆனால், அவ்வாறு ஏற்படும் பொழுது, அதை தங்கம் உண்மையில் குணமாக்குகிறது.