Published: 04 செப் 2017

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மற்றும் தங்கம்

1947ஆம் ஆண்டில் இந்தியாவில் காலனியாதிக்கம் குறைந்து, அதன் விளைவாக சுதந்திரம் பெறப்பட்ட மிகக்குறுகிய காலத்தில், இளைய இந்தியாவிற்கு, போர் நடந்திருந்த அந்தக் காலத்தின் அரசியல் சூழலில் மீண்டெழுந்து, செழித்தோங்கவேண்டிய தேவை இருந்தது. இரண்டு உலகப்போர்களின் காரணமாக ஏற்பட்ட அழிவினால் உலகம் முழுவதும் வளங்கள் மற்றும் நிதி நிலைமைகள் துடைத்தெறியப்பட்டிருந்தன.

இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பாவுடனான சிக்கலான அரசியல் உறவுகளின் காரணமாக இந்தியாவின் இறக்குமதியானது முக்கியமாக சோவியத் ஒன்றியத்தில் இருந்து பெறப்பட்டது. இது 1980களின் பிற்பகுதி வரை நீடித்தது, அப்பொழுது சோவியத் ஒன்றியம் என்பது தனித்தனி நாடுகளாகப் பிரிந்ததால் இந்தியாவுடனான வர்த்தக உறவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

பண மதிப்பு குறைக்கப்பட்டதன் காரணமாக 1991-ல் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. முதலீட்டில் பற்றாக்குறை ஏற்பட்டதால், அது பணப் பரிமாற்ற விகிதத்தைக் குறைப்பதில் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தது. இந்திய நாடானது, கடந்த காலங்களில் போதுமானதாக அளவுக்கு தன்னிறைவு கொண்ட நாடாக இருந்ததற்கான புகழைக் கொண்டிருந்தது, அது எப்பொழுதும் கடனை திரும்பச்செலுத்தத் தவறியிருக்கவில்லை. அரசியல் நிகழ்வுகளானது, நாடு இதுவரை எதிர்கொண்டிராத மோசமான பொருளாதார நிலைக்கு மெதுவாக தள்ளியபோது, தேசம் அதிர்ச்சியடைந்தது.

1980களில் ஏற்பட்ட மிகப்பெரிய மற்றும் அதிகரித்துவரும் நிதி சமநிலையின் காரணமாக இந்தியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. 1980களின் நடுப்பகுதியில், பணம் செலுத்தும் சமநிலைகளில் இந்தியாவுக்கு சிக்கல்கள் அதிகரித்தது. 1990களில் நடந்த வளைகுடாப் போருக்குப் பின்னர், பொருளாதாரம் மிக மோசமான சரிவைக் கண்டது, அது இந்தியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதியின் செலவை அதிகரித்தது. இது தேசத்திற்கு சுமையாக ஆனது, இதனால் கிரெடிட் விரைவாகத் தீர்ந்து போனது, மேலும் தற்போதுள்ள முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை வெளியே எடுத்துச்செல்லும் நிலை ஏற்பட்டது. பெரிய அளவிலான நிதிப் பற்றாக்குறைகள், காலக்கெடு அதிகரித்தல், வர்த்தக பற்றாக்குறை ஆகிய அனைத்தும் சேர்ந்து பணம் செலுத்துதல் நெருக்கடியில் உச்சக்கட்டத்தை அடைந்தன.

1990-ன் இறுதியில் இந்தியா கடுமையான பொருளாதார சிக்கலில் இருந்தது. அதிர்ஷ்டவசமாக, நமது இருப்புக்களில் அதிக அளவில் தங்கம் இருந்தது. ரிசர்வ் வங்கியானது கடன்களை சரிசெய்வதற்கான ஒரு தீர்வாக அதை அங்கீகரித்தது. தங்க இருப்புகளை மறுமதிப்பீடு செய்து, தங்கத்தை அடமானம் வைப்பதன்மூலம் அந்நிய செலவாணியை உயர்த்துவதற்கு அரசாங்கம் முன்வந்தது.

ஏப்ரல் 1991-ல், அரசாங்கமானது மீண்டும் வாங்கப்படும் என்ற உறுதிமொழியுடன் 20 டன் தங்கத்தை விற்பனை செய்தது. ரிசர்வ் வங்கியானது நெருக்கடியை முழுமையாகத் தீர்க்க விரும்பியதால், இது போதுமானதாக இல்லை, ஏனெனில் 1934ஆம் ஆண்டின் ரிசர்வ் வங்கி சட்டத்தின் 3 நிபந்தனைகளால் இது கட்டுப்படுத்தப்பட்டது. தங்கமானது செறிவான மதிப்பைக் கொண்டுள்ளதால், அதை அப்படியே விற்க முடியவில்லை, ஆனால் அது அடமானம் செய்யப்பட்டது. மற்ற நாணய ஆணையங்கள் மட்டுமே வாங்குவதற்கு அனுமதிக்கப்பட்டனர், மேலும் அந்த செயல்முறை மென்மையாக நடைபெறுவதை உறுதிப்படுத்த, தங்கம் கொண்ட இந்த சரக்குகளை தனிப்பட்ட முறையில் தேர்வு செய்து, பேக்கேஜிங் செய்து & அனுப்பும் பணியானது கடினமானதாக இருந்தது.

இந்த விதிமுறைகளின் காரணமாக, அது நிறைவேற்றுவதற்கு மிகவும் கடினமான பணியாக இருந்தது, ஆனால் பரிவர்த்தனை இறுதியில் மொத்த கடனாக $405 மில்லியன் பெறப்பட்டிருந்தது, அது அந்த நேரத்தில் மிக அதிக அளவாக இருந்தது. இந்தக் கடுமையான பொருளாதார நடவடிக்கை மற்றும் இந்தியாவின் வரலாற்றில் தங்கத்தின் முக்கியத்துவம் ஆகியவை இன்றையப் பொருளாதார வல்லுனர்களால் இன்றும் குறிப்பிடப்படுகிறது.