Published: 04 செப் 2017

தங்கம், ஒரு முழு தேசத்தின் மீட்பர்

கடந்த பத்து ஆண்டுகளில், அதிக அளவிலான புதிய நிறுவனங்களானது வாகனங்கள், இ-காமர்ஸ், ஐ.டி. போன்ற அதிக இலாபகரமான துறைகளில் உருவாகி, இந்தியா தன்னை மாற்றிக்கொண்டுள்ளது. மேலும் ஊர்கள் நகரமயமாதல், பொருட்கள் மற்றும் சேவைகள் நுகர்வு அதிகரித்தல் மற்றும் வேலைவாய்ப்பு அதிகரித்தல் போன்ற காரணங்களினால் இந்த மாற்றங்கள் தொடரக்கூடும். இன்றைய காலகட்டத்தில், இந்தியப் பொருளாதாரம் என்பது உலகின் ஏழாவது மிகப்பெரியது ஆகும் (மொத்த உள்நாட்டு உற்பத்தியால் அளவிடப்படுகிறது) மற்றும் வாங்கும் திறன் சமன்பாட்டில் (பீபீபீ) மூன்றாவது பெரிய நாடாகும்.

1990களில், இந்தியா கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது; இதனால் நாட்டின் நிதி நிலைமை சீர்குலைந்தது. அரசாங்கம் கடனை செலுத்த முடியாத நிலையில் இருந்ததுடன், அதன் கடன் செலுத்துதல்களை (BOP) பூர்த்தி முடியவில்லை. அன்னியச் செலாவணி குறைந்துவிட்டதால், மூன்று வாரங்களுக்கு இறக்குமதி செய்ய பணம் அளிக்க முடியாத அளவுக்கு இந்தியாவில் நிலை இருந்தது!. 1980களில் பெருகிய பெரிய அளவிலான நிதி ஏற்றத்தாழ்வுகளே பொருளாதார நெருக்கடியின் பிரதான காரணம் ஆகும். வளைகுடா போரில் மோசமாக பாதிக்கப்பட்டதால், எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அதிக அளவில் செலவு ஏற்பட்டது, மேலும் ஏற்றுமதியும் குறைந்ததால், கிரெடிட் அளவு வறண்டு போனது. அந்த தசாப்தத்தின் முடிவில், இந்தியா கடுமையான பொருளாதார சிக்கலில் இருந்தது.

1991-ல், சந்திர சேகர் தலைமையிலான அரசாங்கமானது பிஓபி உதவிக்காக சர்வதேச பண நிதியத்தை (IMF) அணுகியது. ஆனாலும், ஒரு உத்தரவாதம் அளிக்கப்பட்டால் உதவி கிடைக்கும் என்று குறிப்பிட்ட நிதி ஆலோசனை கவுன்சில் தலைவராகவும், இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) கவர்னராகவும் இருந்த சி. ரங்கராஜன், ஒரு புத்தகத்தில் வெளியிட்ட கட்டுரை ஒன்றில், "பல்வேறு சந்தை நிபுணர்களுடன் பேசும்பொழுது, ஒரு கேள்வி பெரும்பாலும் தோன்றியது: நெருக்கடியைத் சமாளிக்க இந்தியா என்ன செய்து கொண்டிருந்தது? பதில் எளிமையானதாக இருந்தது. இந்தியா மிகப்பெரிய அளவில் தங்க இருப்புகளைக் கொண்டுள்ளது. இந்தியா அதை ஏன் பயன்படுத்தக்கூடாது?”

சர்வதேச பண நிதியமும் இந்தக் கோணத்தில் சிந்திக்க தவறவில்லை, இந்தியா தனது தங்க வளங்களை பிணையாக வைத்து, தனது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளுமாறு அது கூறியது. சர்வதேச பண நிதியத்தின் பரிந்துரையை ஏற்றுக்கொள்வதைத் தவிர இந்தியாவுக்கு வேறு வழி இருக்கவில்லை.

பேங்க் ஆஃப் இங்கிலாந்து (47 டன்கள்) மற்றும் யூனியன் பாங்க் ஆஃப் சுவிட்சர்லாந்து (20 டன்கள்) ஆகியவற்றிற்கு 67 டன்கள் தங்கத்தை பிணையாக வழங்குவதன் மூலம், 2.2 பில்லியன் டாலர் கடன் வாங்குவதற்கு தேசம் முடிவெடுத்தது. தேசிய மற்றும் அரசியல் சீற்றங்கள் காரணமாக, நாட்டின் தங்க இருப்புகளின் மீது கொண்ட அதிக பெருமை முடிவுக்கு வந்தது; அது சந்திரசேகர் அரசாங்கத்தை கவிழ்த்தது. பெரும்பாலான அரசியல்வாதிகள் ஒப்புக்கொண்டாலும், இது ஒரு சரியான நடவடிக்கை ஆகும். ஒரு கட்டுரையில், முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னரான எஸ். வெங்கிடரமணன் என்பவர் முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்தியுடன் உரையாற்றுகையில், பிரதமர் அவர்கள் பின்வருமாறு கேள்வியெழுப்பினார்: "நாட்டிற்கு அதன் கடினமான காலகட்டத்தில் உதவும் வகையில் தேச நலனுக்கு உதவி செய்யாவிட்டால், தங்கத்தின் பயன்பாடுதான் என்ன?”

ஒரு புதிய அரசாங்கம் வந்தபொழுது, பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் அவர்கள் முந்தைய அரசாங்கத்தின் நிலைப்பாட்டையே மீண்டும் உறுதி செய்தார். வெளிநாட்டு முதலீட்டிற்கு இந்தியா திறந்த மனதுடன் இருக்க வேண்டும் என்று அவர் நம்புவதாகக் கூறினார், மேலும் புதிய முன்னெடுப்புகளை வலுவிழக்கச் செய்யும் சிவப்பு நாடா முறையைக் குறைத்து, தொழில்துறை நடைமுறைகளை சீராக்கினார். டாக்டர் மன்மோகன் சிங்-ஐ நிதி மந்திரியாக நியமனம் செய்வதவுடன், அவர் இந்தியப் பொருளாதாரத்தை சீர்திருத்தும் நடவடிக்கைகளை ஆரம்பித்தார், அது இன்று வரை இந்தியாவுக்குத் தொடர்ந்து பயனளித்துக் கொண்டிருக்கிறது.

இந்தியாவுக்கு தேவைப்பட்டபோது நமது தங்கத்தின் கையிருப்பு நமக்கு உதவிகரமாக இருந்தது. 18 ஆண்டுகளுக்குப் பின்னர், சரித்திரம் மீண்டும் திரும்பியது, இந்திய ரிசர்வ் வங்கியானது அதன் சொத்து முதலீட்டைப் பரவலாக்கவும், ஒரு ஆபத்து குறைப்பாளராகப் பயன்படுத்திக்கொள்ளவும், சர்வதேச பண நிதியத்தில் இருந்து மூன்று மடங்கு அளவு தங்கத்தைக் கொண்டு வந்தது. இன்று, இந்தியாவில் 557.8 மெட்ரிக் டன்கள் தங்கம் உள்ளது, இது 1991ல் இருந்ததைவிட அதிகமாகும். மேலும், இந்தியாவின் நம்பகத்தன்மை சிறப்பாக உள்ளது என்பது மேலும் முக்கியமானது ஆகும்.