Published: 16 ஆக 2017

தங்கம் எவ்வாறு துணிமணிகளில் பயன்படுகிறது

நகை மற்றும் முதலீடு என்பதையும் தாண்டி தங்கம் பல்வேறு வியப்பான வழிகளில் பயன்படுகிறது. சுகாதாரம், தொழில்நுட்பம் மற்றும் அலங்காரம் ஆகிய துறைகளிலும் தங்கம் பயன்படுகிறது. கி.மு. 7ஆம் நூற்றாண்டிலேயே தங்கக் கம்பிகள் பல் மருத்துவர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது பற்களை அதன் இடத்தில் வைப்பதற்கு பயன்படுகிறது . எகிப்தின் முன்னாள் அரசி க்ளியோபட்ரா அழகிற்காக புகழ்பெற்றவர். அவர் தனது முகத்திற்கு ஃபேசியல் செய்வதற்கும் மற்ற சரும பாதுகாப்பு சிகிச்சைகளுக்கும் தங்கத்தைப் பயன்படுத்தியுள்ளார். இராஜகம்பீரம் மற்றும் செல்வம் ஆகியவற்றின் குறியீடாக தங்கம் துணிமணிகள் துறைகளில் பல்வேறு பயன்களைப் பெற்றுள்ளது. அது நெசவு செய்தல், எம்பிராய்டரி, embroidery மற்றும் பிரிண்டிங்க் என்று பல்வேறு துறைகளையும் உள்ளடக்கியுள்ளது. அவற்றில் சில குறித்து இங்கே காண்போம்:

 
  • துணிமணிகளில் தங்கம் ஆரம்பத்தில் எவ்வாறு பயன்பட்டது என்பதற்கான சான்று ரிக் வேதத்தில் உள்ளது. அது அத்கா (Atka) என்ற தங்க நூலினால் எம்ராய்டரி செய்யப்பட்ட துணியைக் குறிக்கிறது. ஹிரண்யாய்ர் வ்யூதார்ன் (HiranyairVyutarn) என்ற மற்றொரு சொல் தங்கத்தை உள்ளடக்கிய துணியைக் குறிக்கிறது. இந்த துணி சூரியனைப் போல் பிரதிபலிக்கும்.
  • 8ஆம் நூற்றாண்டுக்கும் 11ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட வைக்கிங்குகளின் காலத்தில், கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய ஐரோப்பாவிலும் தங்க நூல் ஆடைகளையும் வழிபாட்டு ஆடைகளையும் வடிவமைக்க பயன்படுகிறது.
  • 14ஆம் நூற்றாண்டில், தங்க பட்டன்கள் அணிந்து கொள்வது செல்வம் மற்றும் சமூக அந்தஸ்தைக் குறிக்கிறது.
  • துணிகளில் தங்கத்தின் பயன்பாடு மாபெரும் இந்து இதிகாசங்களான இராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஹிரண்யடிராப்பி (Hiranyadrapi) என்ற தங்கத்தின் மினுமினுப்பு கொண்ட அங்கி, மனிச்சிரா(Manichira) என்ற தென்னிந்திய தங்க துணிவகை (இதில் கரையோரத்தில் முத்துக்கள் பதிக்கப்பட்டிருக்கும்) ஆகியவை குறித்த உதாரணங்கள் இந்த இதிகாசங்களில் சொல்லப்பட்டுள்ளன. எனவே துணிமணிகளில் தங்கத்தைப் பயன்படுத்தும் பழக்கமானது நகைகளில் அதன் பயன்பாட்டைப் போலவே பழமையானது.
  • இந்தியாவில் பட்டு புடவைகளில், குறிப்பாக காஞ்சிபுரம் மற்றும் கர்நாடக பட்டு புடவைகளில் ஜரிகை (Zari) என்ற பட்டு நூல் பயன்படுகிறது. Zari என்ற சொல் பாரசீக மொழியான ஜார் (Zar ) என்பதிலிருந்து வந்தது. ஜார் என்றால் தங்கம் என்று பொருள். ஜரிகை வேலைப்பாடுகள் எவ்வளவு அதிகமாக உள்ளதோ, அதற்கேற்றார் போல் புடவையின் விலை ரூபாய் இரண்டாயிரத்திலிருந்து 1 இலட்சம் வரை செல்லும்.

    Zari

    Image Source: Source
  • 1960ஆம் ஆண்டிற்கும் 1980ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் பாலியஸ்டர் நூலும் செயற்கை ஜரிகையும் கிடைக்காததால், நெசவாளர்கள் வெள்ளி மற்றும் தங்க நூல்களை புடவைகளுக்கப் பயன்படுத்தினர். அவர்கள் 22 காரட்டிலிருந்து 24 காரட் தங்கத்தைப் பயன்படுத்தினர். 100 கிராம்களுக்கும் அதிகமான தங்கம் பயன்படுத்தப்பட்டது. அந்த புடவைகளின் அசல் ஜரிகைகள் இன்றும் வேண்டப்படுகின்றன. ஏனெனில் அவற்றின் மதிப்பு பல ஆயிரம் ரூபாய்கள் இருக்கும்.

    Silk Saree

    Image Source: Source
  • அதிகபட்ச நெகிழ்வுத்தன்மை கொண்ட, துருப்பிடிக்காத தங்கம் என்பதால் தங்கத்தை கம்பியாக வளைக்கலாம், தகடாக அடிக்கலாம். அதன் பின்னர் இதனை ஒரு தங்க அல்லது பருத்தி கற்றையில் சுற்றலாம். பின்னர் இது எம்பிராய்டரி வேலை செய்யப்பட்டு, அழகிய துணிகளாக வடிவம் பெறுகிறது.
  • தங்கத்தின் மின் கடத்தும் திறன், உடலுக்கு ஏற்ற தன்மை ஆகியவற்றால் தோலுக்கு ஏற்ற ஆடையாகவும் நிலையாகவும் தங்கம் உள்ளது. எனவே இது நூல்களின் மேல் பூச்சாகவும் ப்ரொகேடுகள் செய்யவும் பயன்படுகிறது. ப்ரொகேட் என்றால் ஒரு செழுமையாக நெய்யப்பட்ட வளமையான துணி. உயர்ந்த வடிவங்களுடன் தங்க அல்லது வெள்ளி நூல் கொண்டு நெய்யப்பட்டுள்ளது.
Sources:
Source1Source2, Source3, Source4, Source5, Source6, Source7, Source8