Published: 27 செப் 2017

இந்திய குடும்பத்தின் பரம்பரை சொத்துக்கள் என்பது எப்போதும் தங்கம் போன்று பிரகாசமாக உள்ளது

Indian Gold Jewellery

தங்கத்தின் ஒரு இதயத்தை இந்தியா கொண்டுள்ளது! ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்களுக்காக தங்கம் மதிக்கப்படுகிறது. ஒவ்வொரு குடும்ப விசேஷத்திலும் நமது தாய்மார்கள், அத்தை, பாட்டி ஆகியோர் அழகிய தங்க நகைகளை அணிந்திருப்பதைப் பார்த்திருக்கிறோம். இந்த நகைகளில் பெரும்பாலானவை ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறையினருக்குக் குடும்பச் சொத்தாக அளிக்கப்படுகிறது, பல இளம் பெண்கள் அதை தாங்கள் அணிந்து கொள்ளும் நாள் எப்பொழுது வரும் என்று கனவு காண்கின்றனர்.

தங்க ஆபரணங்களை அடுத்தத் தலைமுறைக்கு கைமாற்றிவிட்டுச் செல்வது என்பது ஒருவரின் சொத்துரிமையின் ஓர் அழகான அடையாளமாகும். தாய்மார்கள் தங்கள் மகள்களுக்கு தங்களின் நகைகளைக் கொடுப்பது அல்லது அவர்களது புதிய மருமகளை வரவேற்பதற்காக வைத்திருக்கும் ‘கதானி’ வளையல்கள் (குடும்பம்) அல்லது மோதிரங்கள் ஆகியவை இந்தியாவில் சாதாரணமாக நிகழ்வு ஆகும். சில நேரங்களில் தங்க வளையல்கள் என்பது ஒரு திருமண ஏற்பாட்டின் ஒரு அடையாளமாகும், மற்ற நேரங்களில் அது உங்கள் குழந்தைகளின் மீதான உங்கள் விலைமதிப்பற்ற அன்பை வெளிப்படுத்த ஒரு வழியாகும்.

எதிர்காலத்தில் தங்கத்தின் விலை அதிகரிக்கும் என்று கருதி பல இந்தியர்கள் தங்க நகைகளை வாங்குகிறார்கள், எனவே, தலைமுறை தலைமுறையாக, நாம் கொடுத்துச் செல்லும் சொத்துக்கள் என்பது நமது கலாச்சாரத்தில் நீண்ட கால முதலீடுகளாக மதிக்கப்படுகிறது! இந்தப் பழக்கமானது இப்போது பெரும்பாலான குடும்பங்களில் தொடர்கிறது. ஒரு குழந்தை பிறந்த நேரத்தில் இருந்து, இந்தியத் தாய்மார்கள் தங்க நகைகளை வாங்குவதற்காக பணத்தை சேமிக்கத் தொடங்குகின்றனர். பொதுவாக, மகள் அல்லது மகனுக்கு திருமணம் செய்யும் போது, பெற்றோர்கள் தங்களின் திருமணத்தின் பொழுது பெற்றிருந்த நகைகளுடன், இந்த நகைகளையும் பரிசாக அளிக்கின்றனர். எனவே, இந்தப் பாரம்பரியம் தொடர்கிறது.

தங்கம் என்பது இந்தியக் கலாச்சாரத்தின் திருமண மரபின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும். எனவே, திருமணத்திற்குப் பிறகு ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கும் போது அளிக்கப்படும் செல்வம் என்பது தம்பதியினருக்குக் கவலையைக் குறைக்கிறது. குடும்பத்தினர்கள் தங்களுடைய பரம்பரை சொத்துக்களை புதிதாகத் திருமணமானவர்களிடம் கொடுக்கிறார்கள், அதை அவர்கள் விற்று, தங்கள் புதிய வாழ்க்கைக்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனாலும், பரம்பரை சொத்துக்களை விற்பது என்பது இந்தியாவில் பொதுவான ஒரு விஷயமல்ல, அவை பல தலைமுறைகளைக் கடந்து வருவதால், அதில் ஒரு உணர்வுப்பூர்வமான விஷயத்துடன் இணைந்துள்ளது. எனவே, பெரும்பாலும் இந்தியர்கள் நெருக்கடியான காலங்களில் வருமானத்தைப் பெறுவதற்கு மற்ற ஆதாரங்களைப் பார்க்கிறார்கள், தங்க நகைகளை தங்களுடைய கடைசி வாய்ப்பாகவே கருதுகிறார்கள்.