Published: 01 செப் 2017
மங்களசூத்ரா - அன்பின் புனித நூல்
![Gold Mangalsutra design Gold Mangalsutra design](/sites/default/files/styles/single_image_story_header_image/public/Mangalsutra%20%E2%80%93%20The%20Sacred%20Thread%20of%20Love_0.jpg?itok=6y_vC6yb)
இந்திய திருமணங்கள் என்பது பொதுவாக "பெரிய கொழுத்த இந்திய திருமணம்" எனக் குறிப்பிடப்படுகின்றன. இந்தத் தலைப்பானது புனிதமான மற்றும் பெரும் நிகழ்ச்சியின் அற்புதமான கொண்டாட்டங்களை சரியாக பிரதிபலிக்கிறது. இந்தியாவில், திருமணம் புனிதமானது ஆகும், எனவே, திருமணத்தின் சின்னமாக மங்களசூத்ரா என்பது பொதுவாக பெண்களால் அணியப்படுகிறது.
இந்தியாவின் பன்முக கலாச்சாரங்கள் காரணமாக திருமணத்தின் பல்வேறு அடையாளங்கள் உள்ளன, இவை மாநிலம், சாதி அல்லது சமூகம் போன்றவற்றுக்கு இடையே வேறுபடுகின்றன. மங்களசூத்ரா என்ற திருமணத்தின் ஒரு புனித நூலானது, நமது பன்முக தேசத்தில் கிட்டத்தட்ட அனைத்துப் பகுதிகளிலும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திருமண வழக்கமாக உள்ளது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் காணப்படக்கூடிய மங்களசூத்ராவின் பல்வேறு வடிவங்களின் பட்டியல் இங்கே உள்ளது;
தமிழ் நாட்டின் தாலிக்கொடி:
மங்கள் தாரணம் என்பது மணமகன் முதல் முறையாக மணமகளின் கழுத்தில் தாலி கட்டும் ஒரு விழா ஆகும். இந்த விழாவானது "சுமங்கலி" என்ற பட்டத்தை ஒரு திருமணமான பெண்ணுக்கு வழங்குகிறது. தென் இந்தியாவின் பழமையான தங்க ஆபரணங்களுள் ஒன்றான தாலி ஆனது, தேவசேனாவுடன் போர்களின் கடவுளான ஸ்கந்தனுக்கு நடந்த திருமணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தாலிக்கொடியானது திருமாங்கல்யம், மாங்கல்யம், தாலி அல்லது கொடி என்றும் அறியப்படுகிறது.
கேரளாவில் தாலி மற்றும் மின்னு:
கேரளா என்பது 'கடவுளின் சொந்த நாடாக' குறிப்பிடப்படுகிறது, மேலும் இது இந்து மற்றும் கிறிஸ்துவ சமூகங்களுக்கும், மற்றும் பல சிறுபான்மை மதங்களுக்கும் தாய்வீடாக உள்ளது. கடவுளின் சொந்த நாட்டில் இந்து மற்றும் கிறிஸ்தவர்கள் ஆகியோருடன் பிற சிறுபான்மை மதத்தினர்களும் சேர்ந்து வசிக்கிறார்கள். கேரள இந்துக்களில் 'மங்களசூத்ரா' என்பது "தாலி" ஆகும், அதை கிறிஸ்தவர்கள் "மின்னு" என அழைக்கிறார்கள். இதய வடிவிலான தங்கப் பதக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட ஒரு குறுக்கு வடிவமைப்பான, கிறிஸ்தவத்தின் அடையாளமாக இருக்கும் ஒரு பதக்கமானது காதல் அன்பைக் குறிக்கிறது. மின்னு என்பது மணமகள், மணமகன், தம்பதியரின் பெற்றோர்கள் மற்றும் தேவாலயம் ஆகியவற்றைக் குறிக்கும் ஒரு நூலின் ஏழு இழைகளால் குறிப்பிடப்படுகிறது.
ஆந்திரப் பிரதேசத்தில் புஸ்டெலு:
பொதுவாக மணமகன் குடும்பத்தினரால் மணமகளுக்காக மங்களசூத்ரா கொண்டு வரப்படுகிறது, ஆனாலும் இந்த சடங்கு ஆந்திராவில் சற்று வித்தியாசமாக இருக்கிறது. மணமகன் மற்றும் மணமகளின் குடும்பத்தினரால் தலா ஒன்று வாங்கப்படும் இரண்டு வட்ட வடிவ வட்டுகளானது, தெலுங்கு மணமகளால் அணியப்படும் தாலியான புஸ்டெலுவில் இருக்கும். இந்த வட்டுகளானது மஞ்சள் கயிறு அல்லது தங்கச் சங்கிலியில் பிணைக்கப்பட்டிருக்கும், மேலும் அவை கருப்பு மற்றும் பவள மணிகள் மூலம் பிரிக்கப்பட்டிருக்கும். திருமண விழாவில், மணமகளின் கழுத்தைச் சுற்றிலும் மூன்று முடிச்சுகளை மணமகன் கட்டுவார்.
திருமணத்தின் பதினாறாம் நாளில், இந்த வட்டுக்கள் சேர்க்கப்படும். இது குடும்பத்தின் அல்லது மாப்பிள்ளை வீட்டின் மூத்த நபரால் நடத்தப்படும் ஒரு சிறிய சடங்கு ஆகும். மற்றொரு பெண்ணின் கேடு நினைக்கும் கண்களில் இருந்து புஸ்டெலு மறைக்கப்பட வேண்டும் என்று நம்பப்படுகிறது.
குஜராத்தின் பாரம்பரிய மங்களசூத்ரா:
குஜராத் மாநிலத்தில், கருப்பு மணிகளால் இணைக்கப்பட்ட தங்கக் கம்பிகள் மற்றும் ஒரு நேர்த்தியான தங்கப் பதக்கம் ஆகியவை இணைந்து பாரம்பரிய மங்களசூத்ராவை உருவாக்குகின்றது.
மகாராஷ்டிராவில் மங்களசூத்ரா:
மகாராஷ்டிரா மாநிலத்தின் மங்களசூத்ரா என்பது குஜராத்தை ஒத்திருக்கிறது, இது தங்கக் கம்பிகளில் இரண்டு இழை கருப்பு மணிகளுடன் தங்க "வடி" (கிண்ணங்கள்) கொண்டுள்ளது. இரண்டு இழை மணிகளானது கணவன் மற்றும் மனைவியைக் குறிக்கிறது. கருப்பு மணிகளானது தீய கண்களை விலக்குவதாக நம்பப்படுகிறது. இரண்டு தங்க வடிகளானது சிவன் மற்றும் சக்தியை குறிக்கிறது.
கர்நாடகாவின் கர்தாமணி பதக்:
கர்நாடகாவின் கூர்க் பகுதியில் உள்ள கொடவா சமுதாயத்தின் மணமகளால் அணியப்படும் கர்தாமணி மற்றும் பதக் ஆகியவை இரண்டு தனித்தனி வடிவிலான நகைகள் ஆகும். பதக் என்பது லக்ஷ்மி அல்லது விக்டோரியா ராணியின் உருவம் பொறிக்கப்பட்ட பெரிய தங்க நாணய பதக்கம் ஆகும், இது நாணயத்தைச் சுற்றி சிறிய
வட்ட வடிவ மாணிக்கக் கற்களைக் கொண்டிருக்கிறது. இந்தப் பதக்கமானது வளத்தைக் குறிக்கும் ஒரு நாகப்பாம்பை உச்சியில் கொண்டிருக்கிறது. அதில் சில நேரங்களில் நன்னீர் முத்துக்கள் தொங்கிக் கொண்டிருக்கும்.
"கர்தாமணி" என்பது பதக் உடன் அணியப்படும் ஒரு கழுத்தணி ஆகும். இது ஒரு கயிறில் பவளம் மற்றும் தங்க மணிகள் கொண்டு செய்யப்படுகிறது. இந்த கயிறுக்குப் பதிலாக ஒரு தங்கச் சங்கிலியையும் பயன்படுத்தலாம். திருமணத்திற்கு ஒரு நாள் முன்பு கர்தாமணி பதக்-ஐ ஒரு கொடவா இன மணமகள் அணிவார். மற்ற கலாச்சாரங்களைப் போலல்லாமல், கொடவா இனத்தின் மங்களசூத்திரமானது மணமகனால் கட்டப்படுவதில்லை, மாறாக, மணமகளின் தாயார் திருமணத்திற்கு ஒரு நாள் முன்பு அதைக் கட்டுகிறார்.
பீஹாரின் டாக் பாக்:
மங்களசூத்ராவின் இந்த வடிவம் மகாராஷ்டிராவைப் போலவே உள்ளது. எனினும், இங்கே பதக்கத்தை மணமகள் தேர்வு செய்கிறார்.
எனவே, இப்போது நமது நாட்டில் அணியப்படும் பல்வேறு வகையான மங்களசூத்ராவின் வடிவங்களை நீங்கள் அறிந்துள்ளீர்கள்.