Published: 28 ஆக 2017

ஏன் குபேர யந்திரத்தை வழிபட வேண்டும்?

இந்து மதம் என்பது உலகில் நீண்ட காலமாக வாழும் தர்மம் ஆகும். இந்துக்கள் பல்வேறு கடவுள்களையும் தேவியர்களையும் வழிபாடு செய்கிறார்கள், மேலும் இந்தியாவில் தோன்றிய பல்வேறு மதம் சார்ந்த மரபுகளைப் பின்பற்றுகிறார்கள். கடவுள்களையும் தேவியர்களையும் தவிர, மரங்கள், தாவரங்கள், ஆறுகள் போன்ற பல்வேறு பொருட்களையும் இந்துக்கள் வணங்குகின்றனர்.

"யந்திரம்" என்பது இந்தியாவில் பரவலாக வணங்கப்படும் கடவுள்கள் மற்றும் தேவியர்களின் ஒரு வடிவமாகும். யந்திரங்கள் என்பது ஒரு வடிவியல் வரைபடம் ஆகும், இது வீடுகளில் மற்றும் கோவில்களில் வழிபடுவதற்காக மற்றும் தியானம் செய்வதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. யந்திரம் என்பது ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக குறிப்பிட்ட தெய்வங்களுடன் தொடர்புடையது ஆகும்.

அனைத்து யந்திரங்களிலும், குபேர யந்திரம் என்பது புகழ்பெற்ற மற்றும் மிகவும் மதிக்கப்படும் மாய வரைபடம் ஆகும். செல்வத்தின் கடவுளான குபேரனை திருப்திப்படுத்துவதற்காக, இந்த யந்திரமானது வீடுகள் மற்றும் பணியிடங்களில் தங்கம் மற்றும் பணத்தை ஈட்ட பயன்படுத்தப்படுகிறது.

குபேர யந்திரம் என்பது ஒரு சிக்கலான வடிவமைப்பு ஆகும், இது ஒரு சிறிய உலோக தகடு மீது வடிக்கப்பட்டிருக்கும், இது பொதுவாக தங்கத்தால் செய்யப்படுகிறது. குபேரன் என்பவர் வடக்கின் ஆட்சியாளராகக் கருதப்படுகிறார், எனவே யந்திரமானது அந்தத் திசையில் வைக்கப்படுகிறது. குபேர யந்திரத்தை வழிபடுபவர்கள், பொக்கிஷம், செல்வம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் மற்றும் தொழில் வாழ்க்கையில் வெற்றி ஆகியவற்றைப் பெறுகிறார்கள் என்று நம்பப்படுகிறது.

இந்தியாவின் தெற்கு பகுதியில், குபேர யந்திரம் என்பது அரிசி மாவு பயன்படுத்தி தரையில் வரையப்பட்ட குபேர கோலம் என்று அறியப்படுகிறது. குபேர கோலம் என்பது பாரம்பரிய இந்திய ரங்கிகோலியைப் போன்று இருக்கும், இதை தென் இந்தியாவின் பல வீடுகளிலும் காணலாம். ஓவியத்தின் புகழ்பெற்ற வடிவமான கோலமானது, சுண்ணாம்பு (சால்க்), சுண்ணாம்பு தூள் அல்லது அரிசி மாவு போன்றப்வற்றைப் பயன்படுத்தி சித்தரிக்கப்படுகிறது.

குபேர யந்திரம் போல் அல்லாமல், குபேர கோலம் என்பது ஒரு மாய சதுரம் ஆகும், அது செல்வத்தையும் வளமையையும் கொண்டு வரும் என நம்பப்படுகிறது. ஒன்பது பெட்டிகளை உருவாக்க, கோடுகளால் இணைக்கப்பட்டுள்ள புள்ளிகளால் குபேர கோலம் கட்டமைக்கப்பட்டுள்ளது. 20, 21, 22, 23, 24, 25, 26, 27 மற்றும் 28 போன்ற எண்கள் இந்த பெட்டிகளில் நிரப்பப்படும், அது நாணயம் மற்றும் மலர்களைப் பயன்படுத்தி அலங்கரிக்கப்படும். சுடோகு புதிர் போலவே, ஒவ்வொரு வரிசை மற்றும் நெடுவரிசையின் மொத்த எண்ணிக்கை என்பது 72 ஆகும்.

குபேர யந்திரம் தவிர, ஸ்ரீ (லக்ஷ்மி) யந்திரம் என்பதும் செல்வம் மற்றும் வெற்றியை ஈட்ட வழிபாடு செய்யப்படுகிறது. லக்ஷ்மி தேவி என்பவர் தங்கத்தின் தேவியர் ஆகும், அவர் தனது பக்தர்களுக்கு தங்கம் மற்றும் தங்க நாணயங்களைப் பொழிகிறார். ஸ்ரீ யந்திரம் என்பது சக்தி மற்றும் ஆற்றல் ஆகியவற்றின் ஆதாரமாக உள்ளது என்று நம்பப்படுகிறது, எனவே நீங்கள் விரும்பும் செல்வத்தையும், வளத்தையும் அடைவதற்கு ஒவ்வொரு நாளும் அதை வழிபட வேண்டும்.