Published: 05 செப் 2017

மைசூரின் தங்க தசரா

தீமைக்கு எதிராக நன்மையின் வெற்றியாக தசரா (தசரா) பண்டிகை கொண்டாடப்படுகிறது, இது விஜயதசமி என்றும் அழைக்கப்படுகிறது. இந்திய துணைக்கண்டத்தில் பரவலாக கொண்டாடப்படும் "நவராத்திரி" (ஒன்பது-இரவுகள்) திருவிழா முடிவடைவதை தசரா குறிக்கிறது.

அதே சமயத்தில், இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கொண்டாடப்படும் துர்கா பூஜா என்பது துர்கா தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இதிகாசங்களின்படி, அரக்கனான மகிஷாசுரனை தேவி கொன்றார், மேலும் அந்த வெற்றி நாளே விஜயதசமி எனும் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. ராமபிரானின் மனைவி சீதா தேவியை கடத்திய ராவணனை ராமன் வென்ற தினமே, வடக்கு, மேற்கு மற்றும் தென்னிந்தியாவில் தசரா திருவிழாவாகும். நவராத்திரியின் ஒன்பது இரவுகள் திருவிழா என்பது துர்கா தேவி அல்லது சரஸ்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, அது தசரா அன்று முடிவுக்கு வருகிறது.

தசரா என்பது மிகவும் மங்களகரமான மற்றும் புனிதமான திருவிழாக்களில் ஒன்றாகும், இது இந்தியா முழுவதும் பிரமாண்டமாகக் கொண்டாடப்படுகிறது. இருப்பினும், கர்நாடக மாநிலத்தின் மைசூர் நகரில் கொண்டாடப்படும் தசரா பண்டிகையானது, அனைத்தையும் ஒப்பிடுகையில், மிகவும் உற்சாகமானது ஆகும், இது நாடு முழுவதும் இருந்து பார்வையாளர்களை ஈர்க்கிறது. உண்மையில், கர்நாடக மாநிலமானது தசராவை அதன் "நடஹப்பா" (மாநிலத் திருவிழா) என்று குறிப்பிடுகிறது. அரக்கனான மகிஷாசுரனை சாமுண்டேஸ்வரி தேவி (துர்கா தேவியின் வடிவம்) வெற்றி கொண்டதை நினைவுகூரும் வகையில், இந்த அரசகுல நகரத்தில் தசரா கொண்டாடப்படுகிறது.

ஜம்பூசவாரி என்று அழைக்கப்படும் பிரம்மாண்டமான ஊர்வலமானது, புகழ்பெற்ற மைசூர் அரண்மனையில் தொடங்கி, பன்னீ மரத்தை (ப்ரோஸோபிஸ் ஸ்பிசிகெரா) பக்தர்கள் வழிபடும் பன்னீமண்டபத்தில் முடிகிறது. இந்த ஊர்வலமானது சாமுண்டேஸ்வரி தேவி அர்ப்பணிக்கப்பட்டுள்ளது; தேவியின் சிலையானது 750 கிலோ எடையுள்ள பெரிய தங்க அம்பாரியில் வைக்கப்படுகிறது, அது பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்ட யானையால் சுமக்கப்படுகிறது. தென்னிந்தியாவின் பிற திருவிழாக்களின் ஊர்வலங்கள் போலவே, அலங்கரிக்கப்பட்ட யானைகளானது ஜம்பூசவாரியில் ஒரு முக்கிய பகுதியாகும். யானைகள் வண்ணமயமான வடிவங்களுடன் அலங்கரிக்கப்பட்டிருக்கும், மற்றும் தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். இந்த ஊர்வலமானது பன்னீமண்டப மைதானத்தில் ஒரு டார்ச்-விளக்கு அணிவகுப்புடன் முடிவடைகிறது.

மைசூர் அரண்மனையில் தசரா திருவிழாவானது தனிப்பட்ட முறையில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி முழுவதும் மற்றும் தசரா திருவிழாவில், இந்த அரண்மனையானது சுமார் 100,000 ஒளி விளக்குகளால் ஒளிர்கிறது. மேலும், உடையாருக்கு (மைசூர் அரச குடும்பம்) சொந்தமான அரியணையான சின்னடா சிம்மாசனம் (கன்னட மொழியில் ரத்ன சிம்மாசனம் என்றும் அழைக்கப்படும் 'தங்க அரியணை’) என்பது, இந்த விழாவின்பொழுது மட்டுமே பொதுமக்களுக்காக காட்சிக்கு வைக்கப்படும். இந்தியாவின் பிரம்மாண்டத்தை மற்றும் பாரம்பரியத்தை மைசூரின் தசரா திருவிழா காட்சிப்படுத்துகிறது, இது இந்த மாபெரும் மற்றும் மங்களகரமான நிகழ்வை ஒரு "கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய" திருவிழாவாக ஆக்குகிறது.