Published: 01 செப் 2017

தங்கத்தின் புனித நன்கொடை

இந்திய கலாச்சாரத்தின் மிகவும் தனித்துவமான அம்சங்களில் ஒன்று "தானம்" (நன்கொடை) ஆகும், பண்டைய சகாப்தத்தில் இருந்து மதம்சார்ந்த மற்றும் ஆன்மிகம் சார்ந்த அனைத்து இந்தியர்களாலும் இந்த மிகச் சிறந்த செயல் பின்பற்றப்படுகிறது. தானம் செய்வதற்காக நோக்கம் என்பது பரவலானது ஆகும், நன்கொடைகளானது பல்வேறு விழாக்களில் மற்றும் சடங்குகளில் மேற்கொள்ளப்படுகின்றன.

தானம் வழங்கும் விழா என்பது ஒரு பெரிய நிகழ்வு ஆகும், அதில் உறவினர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு விருந்தளித்த பிறகு நன்கொடைகள் வழங்கப்படும். பணத்தை நன்கொடைகளாக வழங்குவதால் ஒரே ஒருவருக்கு மட்டுமே நன்மையளிக்கும், ஆனால் தங்கம், நிலம் மற்றும் கன்னியாதானம் (மகளை மணம் செய்து கொடுக்கும் இந்து மத திருமண பழக்கவழக்கம்) போன்றவை ஏழு நபர்களுக்கு நன்மையளிக்கும் என்று நம்பப்படுகிறது.

இந்த மஞ்சள் உலோகமானது அழிவற்றது மற்றும் மங்களகரமானது என்று கருதப்படுகிறது; ஒரு தங்கத்தை நன்கொடையாக அளித்தல் என்பது மிகவும் மரியாதைக்குரிய தானங்களில் ஒன்றாகும். இந்தக் கட்டுரையில், பண்டைய இந்து நூல்களின்படி தங்கத்தை நன்கொடையாக அளிக்கும் பல்வேறு தானங்கள் குறித்து பார்க்கலாம். இந்த தானங்களானது வேத நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள பதினாறு மகாதானங்களின் ஒரு பகுதியாகும்.

 
  • துலா புருஷ தானம்

    இந்த தானத்தில், நன்கொடையாளர் அல்லது ஒரு நபர், முழு உடல் கவசம் மற்றும் ஆயுதங்களுடன் தராசின் ஒரு பக்கத்தில் அமர்வார், அதே நேரம் தூய தங்கமானது தராசின் மற்றொரு பக்கத்தில் வைக்கப்படும். எடையானது 125-200 கிலோ கிராம் வரை ஏற்றப்படக்கூடும். இந்த தூய தங்கமானது விழாவில் உள்ள பிராமணர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த விழாவில் பயன்படுத்தப்படும் தங்கத் தராசும் பிராமணர்களுக்கு நன்கொடையாக அளிக்கப்படுகிறது.

  • ஹிரண்யகர்பா தானம்

    தெய்வீக கருப்பையை பிரதிபலிக்கும் ஒரு தங்கப் பானை நன்கொடை; பானையானது ஒரு தங்க மூடியுடன் 54 அங்குல உயரமும், 36 அங்குல அகலமும் கொண்டு இருக்க வேண்டும். நெய் மற்றும் பால் நிரப்பப்படும் இந்த பானையைத் தயாரிப்பதற்கு சுமார் 40-50 கிலோ மஞ்சள் உலோகம் தேவைப்படுகிறது.

  • பிரமாந்த தானம்

    இதில் தங்கத்தால் வடிவமைக்கப்பட்ட நமது பிரபஞ்சத்தை பிரதிபலிக்கும் நன்கொடை அளிக்கப்படுகிறது. இந்த மினியேச்சரானது, நன்கொடை அளிப்பவரின் விருப்பம் மற்றும் திறனுக்கு ஏற்ப 1.25 கிலோ கிராம் முதல் 62.2 கிலோ கிராம் வரை இருக்கும்.
    விழாவுக்குப் பிறகு, மினியேச்சரானது பத்து பாகங்களாக பிரிக்கப்படுகிறது, இதில் இரண்டு குரு (ஆசிரியருக்கு) நன்கொடையாக அளிக்கப்படுகிறது மற்றும் மீதமுள்ளவை பிராமணர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

  • கல்ப்-பதாப் தானம்

    இந்த தானத்தில், கல்ப விருக்ஷத்தின் (ஆசைகளை-நிறைவேறும் தெய்வீக மரம்) தங்க மினியேச்சரை ஒரு நபர் அளிக்கிறார். இந்த மரமானது பழங்கள், மலர்கள், பறவைகள், ஆபரணங்கள் மற்றும் ஆடைகள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட வேண்டும். தங்க மரமானது குருவிற்கும் அவரது சீடர்களுக்கும் நன்கொடையாக அளிக்கப்படுகிறது. அதேபோல், கல்ப்-லதா தானம் என்பதில் கல்ப விருக்ஷம் உட்பட பத்து தெய்வீக கொடிகள் நன்கொடையாக அளிக்கப்படுகிறது, அவை பழங்கள் மற்றும் ஆபரணங்களால் அலங்கரிக்கப்படுகிறது.

  • ஹிரண்ய காமதேனு தானம்

    காமதேனு என்பது தெய்வீக பசு ஆகும், இது அள்ளித்தரும் பசுவாகவும், அனைத்துப் பசுக்களின் தாயாகவும் கருதப்படுகிறது. தான விழாவில் பால் உறிஞ்சும் ஒரு கன்றுடன் கூடிய காமதேனுவின் தங்க மினியேச்சர் நன்கொடையாக அளிக்கப்படுகிறது. இந்தப் பசுவானது தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

  • ஹிரண்ய அஷ்வ்ராத் தானம்

    இரண்டு அல்லது எட்டு குதிரைகளுடன் கூடிய ஒரு தங்க இரதத்தைப் போன்ற வடிவத்தை நன்கொடை அளிப்பவர் உருவாக்குகிறார். குதிரைகளானது தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்படுகின்றன. இதேபோல், நான்கு யானைகளால் இழுக்கப்படும் ஒரு இரதத்தை தானமளிப்பது என்பது ஹெம் ஹஸ்தி ரத தானம் என்று அழைக்கப்படுகிறது.

  • தாரா தானம்

    தாரா என்பது புனிதத் தாயான பூமியாகும்; இந்த தானத்தில் புனித ஆறுகள், மலைகள் மற்றும் பெருங்கடல்கள் ஆகியவற்றை சித்தரிக்கும் பூமியின் ஒரு தங்க மினியேச்சர் அளிக்கப்படுகிறது.

  • சப்த சாகர் தானம்

    சர்க்கரை, உப்பு, பால், நெய், தயிர், வெல்லம் மற்றும் புனித நீர் ஆகியவை நிரம்பிய ஏழு தங்கப் பானைகள் நன்கொடையாக அளிக்கப்படுகின்றன. இந்தப் பானைகளானது ஏழு சமுத்திரங்களைக் குறிக்கின்றன.

குருக்கள், பிராமணர்கள் அல்லது பிற மரியாதைக்குரியவர்களுக்கு தங்கத்தை நன்கொடையாக வழங்குவதற்காக தானம் செய்ய சில வழிகள் இருக்கின்றன. அவை இந்தியாவின் வளமான மற்றும் அரச கலாச்சாரங்களை வெளிப்படுத்துகிறது.