Published: 20 பிப் 2018

தங்க வாசஸ்தலங்கள்: அமிர்தசரஸ்

Tale of divine - Golden Temple

இந்தியாவின் கோவில்கள், எல்லா மதங்களிலும் உள்ள வழிபாட்டுத் தலங்களைப் போலவே, கடவுள் நம்பிக்கை, உட்புற அழகு மற்றும் தூய்மை ஆகியவற்றின் கலங்கரை விளக்கங்களாக, மதரீதியாகவும் கட்டடக்கலை தோற்றம் மற்றும் பேரழகிலும் வானளாவிய சிறப்புடன் உயர்ந்து விளங்குகின்றன. இத்தகைய கோவில்களுள், மக்களால் பெரிதும் விரும்பப்படுகிற, தூய்மையான விலை உயர்ந்த உலோகமான தங்கத்தால் முழுவதுமாக அல்லது பகுதியளவில் முலாம் பூசப்பட்ட கோவில்கள், வெற்று பாதங்களால் யாத்திரை செல்லும் பக்தர்களை மட்டுமல்லாமல் பெரிய அளவில் மத நம்பிக்கை இல்லாதவர்களையும் ஆண்டு முழுவதும் ஈர்த்து வருகின்றன. பக்தர்களுக்கும் மற்ற சுற்றுலா பயணிகளுக்கும் ஒரேமாதிரியாக, ஒரு கோவிலின் ஆழமான உணர்வுசார் ஈர்ப்பு சக்தியின் ஒட்டுமொத்த பிரகாசத்தையும் கொடு்க்க முடியுமானால் - அது தங்கத்தால் மட்டுமே முடியும்.

இந்தியாவின் புகழ்பெற்ற 'தங்க' கோவில் அமிர்தசரஸில் உள்ளது - சீக்கிய கோவில்களுள் மிகவும் புனிதமான இந்த ஹர்மந்திர் சாஹிப், தங்கக் கோவில் எனப் பொதுவாக அழைக்கப்படுகிறது.

வழிபாட்டுத்தலமான இந்த அழகான நினைவுச்சின்னம் மாபெரும் ஐந்தாவது சீக்கிய குருவான ஸ்ரீ அர்ஜன் தேவ் என்பவரால் வடிவமைக்கப்பட்டுக் கட்டப்பட்டது. இவர், அனைத்து விதமான கடவுள் நம்பிக்கைகள் கொண்டுள்ள மக்களையும் வரவேற்கும் விதமாக அனைத்து நான்கு திசைகளிலிருந்தும் நான்கு நுழைவாயில்களைக் கட்டினார். அதன் அடித்தளம் லாகூர், ஹஸ்ரத் மியான் மிர் ஜி என்கிற ஒரு முஸ்லிம் துறவியால் நிறுவப்பட்டது, மற்றும் இது இந்து மற்றும் முஸ்லிம் பாணிகளின் ஒரு கலவையாகக் கட்டப்பட்டது என்பதை நினைவில் கொள்ளுங்கள். சாந்து மற்றும் ஆன்மா ஆகியவற்றைக் கலந்து கட்டப்பட்டது.

இந்தத் தங்கக் கோவில் கட்டுமானப் பணிகள் ஏறத்தாழ 14 ஆண்டுகள் நடைபெற்று 1604-ஆம் ஆண்டில் முடிவடைந்தது. ஆனால் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே பஞ்சாபின் மிகப் பெரிய ஆட்சியாளரான மகாராஜா ரஞ்சித் சிங் அவர்களால் ஹர்மந்திர் சாஹிப்பின் மேல் தளங்கள் 750 கிலோ தங்கத்தால் மூடப்பட்டன.

அமிர்தசரஸில் தூய தேன் நிரப்பப்பட்ட சரோவருக்கு நடுவில் நிற்கின்ற தங்கக் கோவில் மழை, ஆலங்கட்டி மழை, குளிர் அல்லது சூரிய ஒளி என அனைத்திலும் ஜொலித்து நிற்கிறது. இங்குள்ள பல உள்ளக தாழ்வாரங்கள், வளைவுகள் மற்றும் உட்கூரைகள் ஆகியவை விலையுயர்ந்த உலோகத்தால் உள்ளுறையிடப்பட்டுள்ளன. மேலும் இது, காலத்தாலும் ஆண்டு முழுவதும் ஒவ்வொரு நாளும் வருகை தருகின்ற 100,000 க்கும் அதிகமான மக்களின் தொட்டு உணரக்கூடிய பக்தியாலும் மேலும் மெருகூட்டப்பட்டு மின்னுகிறது.