Published: 05 செப் 2017

எதிர்பாராத தங்கம்: பெருங்கடல்களில்

பல நூற்றாண்டுகளாக, தங்கத்தைத் தேடி மனிதர்கள் நமது கிரகத்தின் மேற்பரப்பை தோண்டி, வெட்டி எடுத்தனர். இந்த முயற்சியின் காரணமாக, இன்றைய தேதி வரையில் 173,000 மெட்ரிக் டன்கள் மதிப்புள்ள விலைமதிப்பற்ற உலோகத்தை மனிதர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். உலகளாவிய தங்கத்தின் தேவையானது உச்சநிலையை எட்டும்போது, தங்கத்தின் தேடல் தொடர்பான நமது முயற்சிகளானது நம்மை தண்ணீரின் ஆழத்திற்கு, குறிப்பாக, பெருங்கடல்களுக்கு நம்மை கொண்டுச் செல்லும்.

நமது பெருங்கடல்களில் உள்ள மதிப்பிடப்பட்ட மொத்த தங்கத்தின் மதிப்பானது சுமார் 150 டிரில்லியன் டாலர்கள் ஆகும். நேஷனல் ஜியாக்ரஃபிக் குறிப்பிட்டுள்ளபடி, அதைச் சமமாகப் பிரித்துக்கொடுத்தால், பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனும் 4.5 கிலோ தங்கம் வைத்திருப்பார் என்பது அதன் அர்த்தமாகும். இது உற்சாகமளிப்பது போல் தோன்றுகிறதா?

தங்கமானது கடலில் பாறைகளில் படிமங்களாகவும், சிறிய அளவில் தண்ணீரில் கரைந்தும் உள்ளது. கடல் நீரில் உள்ள தங்கமானது மிகவும் நீர்த்த நிலையில் உள்ளது, மேலும் ஒரு டிரில்லியனுக்கு ஒரு சில பகுதிகள் என்ற செறிவுகளில் உள்ளது. 1 லிட்டர் கடல் நீரில் ஒரு கிராம் தங்கத்தில் 1/13 பில்லியன் பகுதி உள்ளது என்று நாம் புரிந்துகொள்ளலாம், அல்லது வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நாம் 1 கிராம் தங்கத்தை உற்பத்தி செய்ய நமக்கு 13 பில்லியன் லிட்டர்கள் கடல்நீர் வேண்டும். 1 கிராம் தங்கத்திற்கு நிறைய தண்ணீர் தேவைப்படும் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் சொல்வது சரிதான். உண்மையில், இந்த தங்கத்தைப் பிரித்தெடுப்பதற்கான அதிக செலவுகளே, நாம் கடல்களின் கீழ் தங்கத்தைத் தேடி செல்லாமல் இருப்பதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாகும், ஆனால் அதற்காக நாம் முயற்சி செய்யவில்லை என்று சொல்ல முடியாது.

ஜெர்மனியைச் சேர்ந்த அறிவியலாளரான ஃபிரிட்ஸ் ஹேபர் என்பவர் முதலாம் உலகப் போர் முடிவில் அவர்களுக்கு வழங்கப்பட்ட மாபெரும் கட்டணத்திற்குப் பணம் செலுத்துவதற்காக, தண்ணீரில் இருந்து தங்கத்தைப் பிரிப்பதற்கான மாபெரும் மையவிலக்கிகளை பயன்படுத்துவதைப் பரிந்துரைத்தார். எனினும், மையவிலக்கிகளைப் இயக்குவதற்குத் தேவையான ஆற்றல் மற்றும் மையவிலக்கிகளில் பயன்படுத்தப்பட வேண்டிய கடல்நீரின் கன அளவு ஆகியவை காரணமாக இந்த அணுகுமுறையானது நடைமுறைக்கு உகந்ததாக இல்லாததாகவும், பொருளாதார ரீதியாக சாத்தியமற்றதாகவும் உள்ளது.

சென்னையைச் சேர்ந்த மற்றொரு விஞ்ஞானியான ஜாய் பிரகாஷ் அகர்வால் என்பவர், தங்கத்தை ஒரு நகர்வு இல்லாத திரவ சவ்வு (ஐஎல்எம்) பயன்படுத்தி பிரித்தெடுக்க முடியும் என்று முன்மொழிந்தார். தற்போதைய தீர்வுகளில் ஏற்படும் பாதி செலவில் தனது செயல்முறையானது தங்கத்தைப் பிரித்தெடுக்கும் என்று அகர்வால் கூறினார், இது இந்திய அரசின் கவனத்தை ஈர்த்தது.

உயிரிமருத்துவ பொறியியலாளரும் கண்டுபிடிப்பாளருமான மார்க் சல்லிவன் என்பவர் புகழ்பெற்ற அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சியான ஷார்க் டேங்கில் ஒரு இயந்திரத்தை வடிவமைத்து வழங்கினார் என்பதே, கடலில் இருந்து தங்கத்தைப் பெறுவதற்கான உரிமை கோரல் தொடர்பான உலகின் மிகப் புகழ்பெற்ற சமீபத்திய விஷயமாகும் – அவர் இந்தக் கிரகத்தின் கோரியோலிஸ் விளைவைப் பயன்படுத்தி ஆற்றலை உற்பத்தி செய்தார். ஒரு துணைப்பொருளாக, அவரது கடல் விசையாழிகளானது கடலில் இருந்து தங்கத்தை வடிகட்டும் பணியைச் செய்தது.

அதிக அளவிலான ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் அரசாங்கங்கள் ஆழத்தில் மறைந்திருக்கும் மதிப்பை உணர்ந்துள்ளதால், பெருங்கடல்களிலிருந்து தங்கத்தைப் பிரித்தெடுப்பதற்கான சாத்தியக்கூறு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.